Thursday, April 21, 2011


காதலில் தோல்வி

கண்டதால் வந்ததா காதல் - இல்லை

கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.

கண்ணெதிரே நீ.... ஒரு நாள்

கலங்கினாய் எனைப் பார்த்து

உறைந்தது என் உதிரம்.

தளர்ந்தது என் சரீரம்.

தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்

தாங்கியது என் இதயம்.

காத்திருந்தேன் பல நாட்கள்

தன்னந்தனியாய்......

கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்

வந்தது உன் தகவல்

வாடிய பூவும் மலர்ந்தது....!

ஊருக்கு ராஜாவாய் நீ.....

உன்னுடலுக்கு ராணியாய் நான்

இருப்பேன் என நினைத்தேன்.

அதில் ஒரு மாற்றம் கண்டேன்

சரியென சொன்ன உதடுகள்

சத்தியம் மறந்தது ஏனோ....!

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.

கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.

என் வாழ்வில் வந்த துன்பம்

சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...

விடை தேடி அலைகின்றேன்

விடிவொன்று கிடைக்குமோ....!

புதிரான அகிலத்தில் - ஏன்

பிறந்தேன் அன்று...

திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்

இருட்டறையாய் மாறியது ஏனோ...

புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்

புரியவில்லை போகும் பாதைகள்..........

No comments:

Post a Comment